முதல்வரின் செய்தி

தேனி அரசு சட்டக்கல்லூரி 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் தற்காலிகமாக கட்டிடத்தில் துவக்கப்பட்டது . தற்போது தப்புகுண்டு கிராமத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 30.04.2022 ஆம் தேதியன்று துவக்கப்பட்டு புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி சட்டக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது . தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . அகில இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இக்கல்லூரியில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன . இக்கல்லூரி மாணவ/மாணவியருக்கான விடுதி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது . மேலும். இக்கல்லூரி வளாகத்தினுள்ளே தனியாக அணைத்து வசதிகளுடன் கூடிய நூலக கட்டிடமும், கலைக்கூடமும் அமைந்துள்ளன. இக்கல்லூரியின் அணைத்து கட்டிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளும், மின்தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இணைப்பாடத்திட்ட செயல்பாடுகளாக மாதிரி நீதிமன்றம் , மாதிரி – நாடாளுமன்ற நடத்துதல் , மாதிரி வழக்குகள் நடத்துதல் , இலவச சட்ட உதவி வழங்குதல் விவாதங்கள் நடத்துதல் , விளையாட்டு மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன

© Copyright - Government Law College Theni
Skip to content